21 Aug 2010

'பஸ்'லயா வந்த????






பஸ்சில் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் .....
'வாவ் ' அல்லை தொல்லை இல்லாமல் ஹாயாக பயணம் போகலாம்...
இல்லன்டா ...;
அந்தப்பயணம் போல ஒரு எரிச்சல் பிடித்த பயணம் ஒண்டும் இல்ல......
அங்காலையும் இடி....
இங்காலையும் இடி....
முதுகுதண்டுக்குள்ளாள வியர்வை
வெள்ளமாய் ஓடும்.....
அல்லாஹ் ,
'' முன்னால போ...''.கண்டக்டர் கத்துவான்.....
முன்னால போவன்......
''பின்னால போ.....''மாறி நிண்டு கத்துவான்....
பின்னால போவன்....
இறங்குமட்டும் இந்தக் கூத்துதான்......
முன்னுக்குபோற ....
பின்னுக்குவார....
முன்னுக்குபோற ....
பின்னுக்குவார....
வேலைக்கி போகண்டு பூசின பவுடர் அந்த பொடிச்சிற முகத்தால வேருவையா வடியிது.....
என்ட 'பெயார் அன் லவ்லி' பிசின் மாதிரி ஒட்டுது.....
இந்த பஸ் ...
அங்க நிக்கிது
இங்க நிக்கிது ....;
வியர்வ நாத்தம் குடலை பிக்கிது....

இளவட்டங்கள் கூடிநிண்டு
சிரிச்சி கூத்தடிக்குது....
அவள் எப்படி ?
''அவளோட பேசினாயா..
என்னோட சிரிச்சாண்டி...''
என்ன பேசறம் எண்டு இல்லாம எண்ணமெல்லாம் பேசுது.....
எங்களுக்கும் காது இருக்கு பாத்து..!!

அடேய் டிரைவர் ,கெதியில எட்றா பஸ்ஸ ...........

No comments:

Post a Comment