3 Aug 2010

ஹலோ















ஹலோ ............!!!


பதினோராவது முறையாகவும் கட்டிலில் கிடந்து சக்கரம் கிறுகி எழுந்துவிட்டேன்....
அவரிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை..............
''போனை'' பார்க்கப்பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது...
''மிஸ் கால் '' களுக்கு பதிலில்லை
எப்போவும் அவர் இப்படி நடந்துகொள்வதில்லை............
வேலை முடிந்த கையோடு போனை தூக்கினால் ,வீடு வந்து சேரும் வரையான ஒரு மணித்தியாலங்களுக்கும் பேசுவார்...........
பேசுவார்....பேசிக்கொண்டே இருப்பார் .............
கல்யாணம் நிச்சயமான புதிதில் துவங்கிய பேச்சு..
''மிஸ் கால்'' பண்ணி மறு நிமிஷம் கால் வரும்,
திருமணமாகி ஒன்றேகால் வருடங்களுக்குப்பினாலும் அப்படி இருப்பதில் எனக்கு ஏகப்பட்ட சந்தோசம்.....

இன்றைக்கு என்னவாகிவிட்டது....???
மனசு கிடந்து மல்லுக்கட்டியது....
போனை நானாக எண்ணி வாழ்வதாய் புலம்புவாரே .....
போன் மட்டும் இல்லை என்றால் ''வெளிநாடும் வேண்டாம் ..வேலையும் வேண்டாம்'' என்று...தூக்கி வீசிவிட்டு வந்துவிடுவாரே ...........

எந்த வேலையிலும் மனசு நிக்கவில்லை ....
துவைக்கப் போட்ட உடுப்பு ....
திருத்த வேண்டிய பரீட்சை பேப்பர் .............
நாளைக்குப் படிப்பிப்பதர்கான பாட ஆயத்தங்கள்
ஆயிரத்தெட்டு வேலைகள் கிடக்கு...
எதிலும் தலையை நுழைக்க முடியல்லையே....

கறி சரியில்லையாம் என உம்மாவோடு வாக்குவாதப்பட்ட தம்பியை வாங்கு வாங்கென்று வாங்கினேன்
யாரோடும் பேசப்பிடிக்கவில்லை
எல்லோரிலும் எரிச்சல் எரிச்சலாக வருது...






















மறுபடியும் மறுபடியும் ''மிஸ் கால்''
ஒரு எஸ்.எம்.எஸ்
அதில் ஏகப்பட்ட உருகல்
'' டேய்,என்னடா பண்ணுறாய்
என்ன ஏதாவது கோவமா?
நேத்து ஏதாவது தப்பா பேசிட்டனா ?
ப்ளீஸ் கால் பண்ணுடா..?

என்னை அறியாமல் ....
கோவத்துக்கு மத்தியிலும் இவ்ளவு வழிதல்

நான் மட்டும்தான் இப்படியா?
என் மனோநிலையில் இருக்கும் மற்றவர்களுக்கும் இப்படி இருக்குமா?

'போனை' ' சுவிச் ஓப்' பண்ணி கட்டில் மூலையில் எறிந்தேன்
...............................................................................
மனசு கேக்காமல் மறுபடியும்
எடுத்து, அறியாமல் உறங்கிப்போனேன்
தூங்கி எழுந்த பிறகும் கண்கள் போனையே தேடி ஏமாந்து போயிற்று

வரட்டும் .....செல்லம்...செல்லக் குட்டி ...என்று உருகட்டும்
எதற்கும் சாய்வதில்லை

சனியன் பிடித்த ''போன்'' அடித்து அடித்துக்கிடக்கட்டும்....

பன்னிரண்டு மனித்தியாலங்களுக்குப்பிறகு
போன் அலறியது
அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறேன்

அவருடைய நம்பர் இல்லை ................
பேசப்பிடிக்கவில்லை
அப்படியே நகர்ந்துவிடுகிறேன்............

என்னடி அவசரத்துக்கு கால் பண்ணினா தூக்கமாட்டியே....
என்று என் சிநேகிதிகளில் யாரேனும் புலம்பப்போகிரார்கள்

அதற்கடுத்தாற்போல் அவரிடமிருந்து 'கால்'
ஹலோ ......
ம்ம்...
''என்னடா...??? ''
நான் பேசல்ல..........
''என்ன குட்டிம்மா கோவமா? ''
இதுக்கும் பேசல்ல
'சாரிடா'
............................
...............................
''தொண்ணுத்தொன்பது மிஸ் கால்
ஒரு எஸ்.எம்.எஸ்
சாரி டா குட்டி............ ''

''வேல இருந்து வரக்குள்ள போன்ல சார்ஜ் இல்லடா...
வீட்ட வந்து சார்ஜ்ல போட்டுட்டு தூங்கிட்டண்டா ,
சரியான அலுப்பு ....வேலையில ''சைலன்ட்ல '' போட்டன் ,
பிறகு மாத்தல்லடா................அத

அவர்முடிக்கவில்லை.................
நான் உடைந்து அழுதேன்....
''இப்படியெல்லாம் இருக்காதீங்க
என்னால ஏலா..........என்னமோ ஏதோ எண்டு மனசு பதரினது எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் விம்மத்துவங்கினேன் ...

இப்போது என்னிடம் பிடிவாதம் இல்லை
அவர் மேல் கோபம் இல்லை
மெது மெதுவாக நான் கரைந்துகொண்டிருந்தேன் ...............

No comments:

Post a Comment