25 Aug 2010

பயணம் .........






உன்னிடம்;
போய் வருவதாய் சொல்லி
விடைபெற்றேன்;

மீளவும் திரும்பல்
நிச்சயமில்லை;

எடுத்த தண்ணீர்...
வாய்க்குழியை
எட்டும் முன்னும்....

சமைத்த உணவை
உண்பதற்கு முன்னாலும்.....

எழுதிய பரீட்சை முடிவுகள்
வருவதற்கு முன்னும்....

வாங்கிய புதுச்சட்டை
உடுத்தும் முன்னும்..

ஏன்
தெருவை கடக்கும் முன்னும்..
என - எதிர்பாராமலே
அமைந்துவிடுகிறது.....
மரணம் என்கிற
இறுதிப்பயணம்.....

No comments:

Post a Comment