
உன்னிடம்;
போய் வருவதாய் சொல்லி
விடைபெற்றேன்;
மீளவும் திரும்பல்
நிச்சயமில்லை;
எடுத்த தண்ணீர்...
வாய்க்குழியை
எட்டும் முன்னும்....
சமைத்த உணவை
உண்பதற்கு முன்னாலும்.....
எழுதிய பரீட்சை முடிவுகள்
வருவதற்கு முன்னும்....
வாங்கிய புதுச்சட்டை
உடுத்தும் முன்னும்..
ஏன்
தெருவை கடக்கும் முன்னும்..
என - எதிர்பாராமலே
அமைந்துவிடுகிறது.....
மரணம் என்கிற
இறுதிப்பயணம்.....
No comments:
Post a Comment