12 Jul 2010

























எங்களின் தேசம்....


வயது வரும் முன்னமே
வயசுக்கு வந்து விடுகின்றன
பெண் பிள்ளைகள்....

''ப்ரோய்ளர்'' கோழிகள்
அந்தக் கைங்கரியத்தை
சிம்பிளாய்
செய்துவிட்டு செத்துவிடுகின்றன

பத்து வயதாகும்
முன்னமே
முக்கால்வாசி சந்தோசங்களை
பெட்டிகட்டி வைத்துவிட்டு ...........
வீட்டு மூலைக்குள்
வந்து அமரவேண்டி நேர்ந்து விடுகிறது....

நெருப்பைக்கட்டிகொண்டு
வெளியில் அனுப்பிவிட்டு...
வரும் வரைக்கும்
பெற்ற வயிறு..
எரிந்து கொண்டே கிடக்கிறது....

சயிக்கிளில் ஊர் சுற்றும்
சந்தோசங்கள்
சட்டென்று
பிடுங்கப்பட்டு
குனிந்த தலை நிமிராமல்
நடக்கும் பக்குவம்
படாரென்று வந்து ஒட்டிக்கொள்கிறது....

என்ன புதினமான வாழ்க்கை
பாருங்களேன்.......










2 comments:

  1. //பத்து வயதாகும்
    முன்னமே
    முக்கால்வாசி சந்தோசங்களை
    பெட்டிகட்டி வைத்துவிட்டு ...........
    வீட்டு மூலைக்குள்
    வந்து அமரவேண்டி நேர்ந்து விடுகிறது....//

    உன்மையான கருத்து... சாருன் மிக அருமை.. இன்னும் நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி புஷ்பா ...

    ReplyDelete