15 Jul 2010


தூங்கு வியாதி....


நேரம் தெரிவதில்லை..இடத்தைப்பற்றி துளியூண்டும் யோசிப்பதில்லை;
சட்டென வந்து ஒட்டிக்கொள்கிறது நித்திரை வியாதி....

வகுப்பறைகளை விடவும் மிகச்சிறந்த தூங்கும் இடங்கள் பற்றி...
நான்
யோசித்துப்பார்க்கிறேன்

'பஸ்'இல் தூங்கிவிழும் பக்கத்து இருக்கைவாசிகள் ;வகுப்பறையில் தூங்கும் வாத்திமார்களும்
சுவாரஷ்யத்திற்குரியவர்கள்
பரீட்சை நெருங்க நெருங்க நெருக்கமாகும் தூக்க வியாதி....

இரவிரவாய்
படித்துவிட்டு
பரீட்சை மண்டபத்தில்
தூங்கிவழியும்
கன்றாவித்தனங்கள்
என்னிடத்திலும் நிறைய உண்டு....

பல்கலைக்கழக 'பிரக்டிகல் ' வகுப்புகள் ,பகல் உணவுக்குப் பிறகு
நித்திரை மயக்கத்தில் தொடரும்....
அந்தக் கொடுமையான தூக்கக்கடனை
நிறைவு செய்ய என .....
பல்கலைக்கழக படிப்பு முடிந்த கையோடு நான் முதன் முதலாக பார்த்த வேலை
சாப்பிட்டு விட்டு ,தூங்கோ தூங்கென்று .......தூங்கி முடிப்பதுதான்
ஊரிடிந்துவிழுந்தாலும் விளங்காத தூக்கம்
.......................................................................
வேலைக்குப் போன கையோடு
பகல் தூக்கத்துக்கு பெரிய ஆப்பு.....!!!!

ஒரு புத்தகத்தை
விரித்துப்போட்டபடி........
அல்லது
தொலைபேசி அழைப்பின் சுவாரசியங்களுக்கு நடுவிலும்
நான் தூங்கி வழிந்து கொண்டிருப்பேன் ......................









...

No comments:

Post a Comment